Categories
தேசிய செய்திகள்

“வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு”… அசாமில் காங்கிரஸ் வாக்குறுதி..!!

 “வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு “ என அசாமில் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.

அசாமிலும் தமிழ்நாட்டுடன் சேர்ந்து சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. பாஜகவை எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும், என்று காங்கிரஸ் கட்சி  பல  கட்சிகளை தன்பக்கம் இழுத்து பெரிய மெகா கூட்டணியை அமைத்து உள்ளது .இதனால் அசாமில் சட்டசபை தேர்தல் மிகவும் கடுமையான போட்டியாக இருக்கிறது . அசாமில் பிரியங்கா காந்தி இரண்டு நாட்களுக்கு முன்பு அங்கு தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார். காங்கிரஸ் பெண்கள் முன்னேற்றத்திற்காக நிறைய திட்டங்களை அறிவிக்கும் .

தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும் என்று கூறினார். “வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு என்பதே காங்கிரஸின் முதல் திட்டமாகும்”என்று அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவி சுஷ்மிதாதேவ் அசாமில் பிரச்சாரம் செய்தார் . நாங்கள் இத்திட்டத்தை உறுதியாக நடைமுறைப் படுத்துவோம் .காங்கிரஸ் மிகவும் வலுவான கூட்டணியை அமைத்துள்ளது எனவே நாங்கள் இம்முறை கண்டிப்பாக தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்று கூறினார் .

Categories

Tech |