Categories
மாநில செய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அரசு சார்பில் இருந்து உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் பத்தாம் வகுப்பு தோல்வி, 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வி தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அந்தப் பதிவை தொடர்ந்து புதுப்பித்து கடந்த ஜூன் 30 வரையுள்ள நிலையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலை என்று காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்குகிறது. மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரையில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் மட்டும் போதும் .

மேலும் இன்ஜினியரிங், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம்,பிஎஸ்சி நர்சிங் போன்ற தொழில் பட்டய படிப்புகள் முடித்தவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது என அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் 22 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். குறிப்பாக உதவித்தொகை பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் 2022 ஆம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும்,இதர இனத்தைச் சேர்ந்தவர்கள் 40 வயது கொள்ளும் இருக்க வேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ் உதவி தொகை விண்ணப்ப படிவம் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் வேலை வாய்ப்ப அடையாள அட்டையை ஆதாரமாக காட்டி செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி  வழிகாட்டு மையத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பதாரர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகத்துடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் போலவே தமிழக முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |