தையல்காரர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 9-வது தெருவில் சரவணன்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு கடையில் தையல்காரராக வேலை பார்த்து வருகிறார். அதே கடையில் சிவன் கோவில் தெருவை சேர்ந்த மாதவன் என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நீ சரியாக துணி வைக்கவில்லை என மாதவன் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த சரவணன் மாதவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது மாதவன் கத்திரிக்கோலால் சரவணன் குத்தியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்து சரவணனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.