Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தொழிலாளி… திடீரென நடந்த விபரீதம்… அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கேபிள் ஒயரை மாற்ற சென்ற தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கழனிவாசல் கிராமத்தில் கூலி தொழிலாளியான வள்ளியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதூர் கிராமத்தில் இருக்கும் ஒரு வீட்டில்  கேபிள் வயர் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது  மின்சாரம் தாக்கி  வள்ளியப்பன் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதனால் படுகாயம்மடைந்த வள்ளியப்பனை  அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு  செல்லும் வழியிலேயே வள்ளியப்பன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வள்ளியப்பனின்  சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |