வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 18 ஆயிரத்து 904 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் நேற்று 27வது கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் பேருந்து நிலையங்கள், பஜார், மார்க்கெட் உட்பட 505 இடங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பாக சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. இந்த முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
அதில் குறிப்பாக பூஸ்டர் தடுப்பூசி, இரண்டாவது தவணை தடுப்பூசி அதிகமான நபர்கள் செலுத்தி கொண்டார்கள். சுகாதாரத் துறையின் துணை இயக்குனர் பானுமதி, வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த இந்த சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இந்த மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 18 ஆயிரத்து 904 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினார்கள்.