Categories
தேசிய செய்திகள்

வேன் ஓட்டுநர்களும் இனி ஹெல்மெட் போடணும்… வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி தரும் செய்தி…!!!

வேன் ஓட்டுனர்களும் இனி ஹெல்மெட் போட வேண்டும் என்ற வகையில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் மீறி செல்வதுதான். அதிலும் குறிப்பாக சில வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் பெரும்பாலான விபத்து ஏற்படுகிறது. அதற்காக அனைத்து வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் வேன் ஓட்டுனர்களும் இனி ஹெல்மெட் போடணும் என்ற வகையில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் கஞ்சம் மாவட்டத்தில் ஹெல்மெட் போடவில்லை என கூறி வேன் ஓட்டுனருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் போடவில்லை என்றால் அபராதம் விதிப்பது சரி… ஆனால் வேன் ஓட்டுநர்கள் எப்படி ஹெல்மெட் போட முடியும் என்று ஓட்டுநர்கள் தங்களது குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.

Categories

Tech |