Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வேன்-இருசக்கர வாகனம் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஸ்டூடியோ உரிமையாளர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பஞ்சநதிக்குளம் மேற்கு பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தகட்டூர் கடைத்தெருவில் தனக்கு சொந்தமான ஸ்டூடியோ வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் தகட்டூரிலிருந்து வேதாரண்யத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது ரமேஷ் மருதூர் மாடி கடை பகுதியில் சென்று கொண்டிருந்த போது தீயணைப்பு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றுள்ளார்.

அப்போது எதிரே வந்த வேன் ரமேஷின் இருசக்கர வாகனம் மோதி மீது பலமாக மோதியது. இதனால் படுகாயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரமேஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |