Categories
சினிமா தமிழ் சினிமா

“வேதனையான தருணங்களை தொடர்ந்து வரும் அழகான தருணங்கள் அழகு”…. திருச்சிற்றம்பலம் படத்தை பாராட்டிய பிரம்மாண்ட இயக்குனர்….!!!!!

திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை பார்த்து பிரபல இயக்குனர் சங்கர் பாராட்டியுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். என்னதான் முன்னணி நடிகராக பழமொழிகளில் நடித்து பிரபலமான நடிகராகவும் இருந்தாலும் அவரின் சமீபத்திய படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றது.

இதன் காரணமாக தனுஷின் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்க தனது அடுத்த படத்தின் மூலமாக மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்யும் இணைப்பில் நடிகர் தனுஷ் உள்ளார். அந்த வகையில் செல்வராகவனின் நானே வருவேன் மற்றும் தெலுங்கில் உருவாகும் வாத்தி, மித்திரனின் திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை மிகவும் நம்பி இருக்கின்றார் தனுஷ்.

இந்த நிலையில் யாரடி நீ மோகினி எனும் வெற்றி படத்தை இயக்கிய மித்ரன் பல வருடங்கள் கழித்து மீண்டும் தனுஷ் உடன் திருச்சிற்றம்பலம் படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் மூலமாக ஏழு வருடங்கள் கழித்து அனிருத் மற்றும் தனுஷ் இணைந்து இருக்கின்றார்கள். இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரித்த  இந்த படம் சென்ற ஜூலை 18 திரையரங்கில் வெளியானது. இத்திரைப்படம் வெளியாகி 15 நாட்களுக்கு மேல் ஆன நிலையில் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகின்றது.

இந்த நிலையில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை பார்த்து இயக்குனர் சங்கர் பாராட்டியுள்ளார். இதுபற்றி அவர் பதிவிட்டதாவது, திருச்சிற்றம்பலம் ஒரு அழகான படம். வேதனையான தருணங்களை தொடர்ந்து வரும் அழகான தருணங்கள் அழகு. நித்யா மேனனின் கதாபாத்திரம் மற்றும் அற்புதமான நடிப்பு இதயங்களை கொள்ளை கொள்கின்றது. மித்ரன் ஜவகர் அழகாக எழுதி இயக்கி இருக்கின்றார். தனுஷ் மற்றும் அனிருத் வழக்கம்போல் சிறப்பாக செய்துள்ளார்கள். பாரதிராஜா மற்றும் பிரகாஷ்ராஜ் சிறப்பாக நடித்துள்ளார்கள் என ஷங்கர் கூறியுள்ளார்.

Categories

Tech |