கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா பரவல் கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பொருளாதார ரீதியாக பல நாடுகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து கொரோனாவை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா படிப்படியாக கட்டுக்குள் வந்தது .இதனால் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். இந்த நிலையில் சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
சீனாவில் வேகமெடுத்துள்ள ஒமிக்ரான் BF.7 தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. BF.7, BF.12 ஆகிய 2 வகை தொற்று குஜராத்தில் மூவரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவில் மிரட்டும் புதிய வகை கொரோனா இந்தியாவில் பரவுவது குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல், புதிய வகை கொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஊரடங்கு தேவைப்படாது என்றும் தெரிவித்துள்ளனர்.