Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் பெரியசாமி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ராஜாவின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |