அரசு பேருந்து மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டனியில் மூக்கையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜி என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கூடம் முடிந்து சிறுவன் வேனில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து சாலையை கடந்து செல்ல முயன்ற சிறுவன் மீது சிவகங்கை நோக்கி வேகமாக சென்ற டவுன் பேருந்து மோதியது.
இதனால் படுகாயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டான். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.