Categories
உலக செய்திகள்

வெள்ளை மாளிகை அருகே மின்னல் தாக்கம்…. 4 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு…!!!!!!!

வாஷிங்டனில்  மின்னல் தாக்கியதில் நான்கு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா தலைநகர் வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் சதுக்கம் அருகே நேற்று மாலை திடீரென மின்னல் தாக்கியுள்ளது. இந்த விபத்தில் எதிர்பாராத விதமாக சிக்கி இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார்கள். இந்த விபத்து இரவு 7 மணி அளவில் நடைபெற்றுள்ளது. சதுக்கத்தில் அமைந்துள்ள ஜாக்சன் சிலையின் அருகே அவர்கள் நின்று கொண்டிருந்தபோது திடீரென மின்னல் தாக்கியதால் அவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து பற்றிய தீவிர விசாரணை நடைபெற்றதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் அந்த பகுதியில் தீவிர இடி மற்றும் மின்னல் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது  குறிப்பிடத்தக்கதாகும். இந்த விபத்து பற்றி தேசிய மின்னல் அமைப்பு ஆராய்ச்சி குழுவின் நிபுணர் கிரீஸ் வேகாஸ்கி பேசிய போது வெள்ளை மாளிகை அருகே விபத்து ஏற்பட்ட பகுதியில் ஆறு ஸ்ட்ரோக் மின்னல் தாக்கியிருக்கிறது. அதாவது அதீத மின்சாரம் ஒரே புள்ளியில் பயங்கரமாக தாக்கியுள்ளது. அதுவும் அரை வினாடி பொழுதில் இது நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் அந்த பகுதி முழுவதுமே பரவலாக மின்னல் தாக்கிக் கொண்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஒரு வட்டத்திற்குள் சராசரியாக மின்னல் தாக்கி உயிரழப்போர் 21 பேர் என ஆய்வறிக்கை கூறுகின்றது. அதன்படி இந்த வருடம் மட்டும் மின்னல் தாக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மோசமான வானிலையால் ஏற்படும் இந்த விபத்து தடுக்க முடியாததாக மாறி வருகின்றது. அத்தகைய தருணத்தில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Categories

Tech |