Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வெள்ளைப் பூண்டுக்கு உரிய விலை – விவசாயிகள் மகிழ்ச்சி…!!

நீலகிரி மாவட்டத்தில் மருத்துவ குணம் கொண்ட வெள்ளைப்பூண்டு கிலோ 350 ரூபாய் வரை விற்பனை ஆவதால் விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

மலை மாவட்டமான நீலகிரியில் தேயிலைக்கு அடுத்ததாக மலை காய்கறிகள் அதிக அளவில் பயிராகின்றன. கடந்த 5 மாத காலமாக கொரோனா பிரச்சனை காரணமாக, இங்கிருந்து கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுவது பாதிக்கப்பட்டதால், விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்தனர்.

இந்த நிலையில் தற்போது இங்கு விளையும் வெள்ளைப்பூண்டு முதல் ரகம் கிலோ 350 ரூபாய் வரை விலை போவதால் அதனைப் பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நீலகிரியில் விளையும் வெள்ளைப் பூண்டு குஜராத் மாநிலத்திற்கு அதிக அளவில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. பூண்டின் தற்போதைய விலை குறையாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |