போலந்தை சேர்ந்த வீராங்கனை ஒருவர் தனக்கு கிடைத்த வெள்ளிப் பதக்கத்தை 8மாத குழந்தையின் சிகிச்சைக்காக ஏலத்தில் விட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் உலக நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் போலந்தை சேர்ந்த மரியா என்பவர் ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இவர் பதக்கம் பெற்று தனது நாடு திரும்பிய போது பிறந்து 8 மாதமே ஆன மிலேசெக் மலிசா என்ற குழந்தையின் அறுவைசிகிச்சைக்கு 2.86 கோடி ரூபாய் வேண்டும் என்பதற்காகவும், அந்தத் தொகையை ஈட்ட முடியாமல் அவரது பெற்றோர்கள் மிகுந்த கஷ்டப்பட்டு வருவதாகவும் கேள்விப்பட்டார்.
இதனால் தான் வாங்கிய பதக்கத்தை தன் வீட்டில் அலங்கரிப்பதை விட குழந்தையின் சிகிச்சைக்கு பயன்பெற வேண்டும் என்பதற்காக Żabka சூப்பர்மார்க்கெட் நிறுவனத்தில் ஏலம் விட்டுள்ளார். அவரது பதக்கம் 1 புள்ளி 4 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த பணத்தை வைத்து அந்தக் குழந்தையின் உயிரை மரியா காப்பாற்றியுள்ளார். இதைக் கேள்விப்பட்ட Żabka சூப்பர்மார்க்கெட் நிறுவனம் அவரது பதக்கத்தை அவரிடமே திருப்பி வழங்கியுள்ளது. ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தனது பதக்கத்தை விற்று மனிதநேயத்தின் மங்கையாக மாறியுள்ளார் மரியா.