நடிகர் பயில்வான் நடிகைகள் குறித்து சர்ச்சையான விஷயங்களை வெளியிட்டு சிக்கி வருகிறார். இதனால் அடிக்கடி பொது இடங்களிலும் அவர் சர்ச்சைக்கு ஆளாகி வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகை ர்ச்சிதாவின் இரண்டாவது திருமணம் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அதாவது நடிகர் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக பயில்வான் கூறியுள்ளார்.
ரச்சிதா சீரியல் இயக்குனர் ஒருவரை ரகசியமாக காதலித்து வந்ததாகவும், அவரை தான் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அந்த சீரியல் இயக்குனர் யார் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை. இதனால் இந்த தகவல் உண்மையா? என்பது குறித்து தெரியவில்லை. அதே சமயம் ரச்சிதா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகுதான் பல சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பது உறுதியாகி உள்ளது.