வீட்டின் பூட்டை உடைத்து 2 லட்ச ரூபாய் பணத்தை திருடிச் சென்ற சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேடை பகுதியில் திருப்பதி-செல்வமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் செல்வமணி வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். இதனையடுத்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு செல்வமணி அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் இருந்த 2 லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து செல்வமணி பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பணத்தை திருடியது அதே பகுதியை சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த சிறுவனை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.