Categories
உலக செய்திகள்

வெளிநாடுவாழ் இலங்கையர்களுக்கு… அரசு விடுத்த முக்கிய வேண்டுகோள்….!!!!

வெளிநாடுவாழ் இலங்கை மக்கள் தாயகத்திற்கு அனுப்பும் பணத்தை வங்கிகள் வாயிலாக அனுப்புமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிதவித்து வருகிறது. அன்னியசெலாவணி கையிருப்பு இல்லாததால் எரிப்பொருள், உணவு ஆகிய அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியவில்லை. இதன் காரணமாக நாடு முழுதும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. அன்னியசெலாவணி இல்லாத காரணத்தால் புதியதாக எரிப்பொருள் இறக்குமதி செய்வதற்கான ஆர்டர்களை கொடுக்க இயலவில்லை. மேலும் முன்பே இறக்குமதி செய்யப்பட்ட எரிப்பொருட்களுக்கும் பணம் கொடுக்க முடியவில்லை. முன்னதாக இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளுக்காக 800 மில்லியன் டாலர் அளவுக்கு பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இறக்குமதி ஆர்டர் கொடுக்கப்பட்ட எரிப்பொருளுக்காக 587 மில்லியன் டாலர் தேவைப்படுவதாக இலங்கை எரிசக்தி மந்திரி காஞ்சனா விஜேசேகரா கூறியுள்ளார். பணத்தை தேடுவது ஒரு சவாலாக உள்ளதாக கூறிய அவர், அது மிகப் பெரும் சவாலாக உருவெடுத்து இருப்பதாகவும் கவலை தெரிவித்தார்.

நாடு முழுதும் பெட்ரோல்-டீசலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிவரும் சூழ்நிலையில், 40 ஆயிரம் டன் டீசலுடன் முதல் கப்பல் வரும் 8ஆம் தேதி இலங்கை வந்து சேரும் என அவர் தெரிவித்தார். மேலும் பெட்ரோல் கப்பல் ஒன்று 22 ஆம் தேதி வருவதாகவும் தெரிவித்தார். இலங்கை நாட்டிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கி வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து கடனுக்கு வழங்குவதற்கு தயாராகயில்லை. ஆகவே அன்னிய செலாவணியை உருவாக்கவேண்டிய கட்டாயத்துக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. இப்படி எரிப்பொருள் இறக்குமதிக்காக அன்னியசெலாவணி அதிகளவு தேவைப்படுவதால் அதனை ஈட்டுவது தொடர்பாக அரசு தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. ஒருபகுதியாக வெளிநாடுவாழ் இலங்கை மக்களிடம் மீண்டுமாக உதவிகளை கேட்டுள்ளது.

அந்த அடிப்படையில் தாயகத்திலுள்ள தங்கள் உறவுகளுக்கு பணம் அனுப்பும் வெளிநாடுவாழ் இலங்கையர்கள், அப்பணத்தை வங்கிகள் வாயிலாக அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதனிடையில் சுமார் 20லட்சம் இலங்கை மக்கள் வெளி நாடுகளில் பணிபுரிவதாக கூறிய மந்திரி விஜேசேகரா, அவர்கள் முறைசாரா நிறுவனங்கள் வாயிலாக பணத்தை அனுப்பாமல், வங்கிகள் மூலம் அனுப்பி அரசுக்கு உதவவேண்டும் என்று அறிவுறுத்தினார். பெட்ரோல்-டீசல் பற்றாக்குறையால் இலங்கை நாட்டில் பல்வேறு துறைகள் முடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக பள்ளிகள் வரும் 8ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. அத்துடன் நேற்றுமுதல் தினசரி 3 மணிநேரம் மின்வெட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இலங்கை நாட்டில் நீடித்துவரும் இந்த மின்வெட்டு காரணமாக தொழில் துறை முடங்கி பொருளாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது. அ

ந்நாட்டில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிப்பொருள் வழங்கப்படுவதால் தனியார் வாகன ஓட்டிகள் பெட்ரோல் மற்றும் டீசல் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக அவர்கள் எரிப்பொருள் விற்பனை நிலையங்களில் நாள்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் குருணகேலா மாவட்டத்தில் இவ்வாறு எரிபொருளுக்காக காத்திருந்த ஓட்டுநர் ஒருவரை ராணுவ அதிகாரி கடுமையாக உதைக்கும் வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து அந்த ராணுவ அதிகாரி மீது விசாரணைக்கு ராணுவம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் விமான எரிப்பொருள் மற்றும் அன்னியசெலாவணி பற்றாக்குறை காரணமாக இலங்கைக்கான இருக்கை எண்ணிக்கையை விமான நிறுவனங்கள் குறைத்துவிட்டது. அதிலும் குறிப்பாக சென்ற சில மாதங்களில் 53 % அளவுக்கு இருக்கைகளின் எண்ணிக்கையை குறைத்து இருப்பதால், முன்பே தள்ளாடி வரும் இலங்கையின் சுற்றுலாத்துறை மேலும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.

Categories

Tech |