Categories
தேசிய செய்திகள்

வெல்லும் வரை புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை… விவசாயிகள் ஆவேசம்…!!!

தங்கள் போராட்டம் வெல்லும் வரை புத்தாண்டை கொண்டாட போவதில்லை என்று விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 40 அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் 37வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் 6வது கட்ட பேச்சுவார்த்தையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொட்டும் பனியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அறிவித்துள்ளது. இதனையடுத்து தங்கள் போராட்டம் வெல்லும் வரை புத்தாண்டை கொண்டாட போவது இல்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |