நாய்களின் நடமாட்டத்தை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே கோட்டூரை சேர்ந்த மணிமாறன் வசித்து வருகிறார். விவசாயியான இவர் நேற்று காலை அங்குள்ள தனது தோட்டத்தில் நடை பயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அவர் கட்டி வைத்திருந்த விலை உயர்ந்த இரண்டு நாய்க்குட்டிகள், இரண்டு வாத்துகள் போன்றவை பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் ஆழியாறு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் நாய் மற்றும் வாத்துக்கள் இறந்து கிடந்த இடத்தின் அருகே பதிவான கால் தடங்களை ஆய்வு மேற்கொண்டனர். இதில் அங்கு நாயின் கால் தடங்கள் மட்டும் இருந்தது. இதனால் வெறிநாய் கடித்து நாய்கள், வாத்துகள் இறந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். அதனால் வெறி நாய்களின் நடமாட்டத்தை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.