மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கரை பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான கலையரசன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 4-ஆம் தேதி கலையரசன் சமையல் செய்வதற்காக மண்ணெண்ணெய் ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது திடீரென ஸ்டவ் வெடித்து சிதறியதால் கலையரசன் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கலையரசன் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.