தி.மு.க பெண் கவுன்சிலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அன்னியாளம் கிராமத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனுராதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தளி ஒன்றிய 16-ஆவது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருந்து வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அனுராதா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் மன உளைச்சலில் இருந்த அனுராதா தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனுராதாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.