Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“வீட்டில் நடந்த விற்பனை” வசமாக சிக்கிய பெண்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த  தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்லம்மாள் என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து  கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து  காவல்துறையினர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த செல்லம்மாளை  கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |