வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள கீழ தேவதான பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் ஓயாமாரி சுடுகாடு பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அந்த வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் நடத்தியது உறுதியானது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்திய குற்றத்திற்காக ராணி மற்றும் அவரது உறவினரான கதிர்வேல் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் 4 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.