Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற நண்பர்கள்…. மாணவர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்திலுள்ள தேனம்பாடி கிராமத்தில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆதஸ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது நண்பர்கள் வழக்கம் போல பள்ளிக்கு அழைத்து செல்வதற்காக ஆதஸின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் ஆதஸ் நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது ஆதஸ் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Categories

Tech |