மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அழகிரி பாளையம் மங்கலம் கிராமத்தில் ஆனந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான குணா என்பவருடன் இரவு நேரத்தில் வெளியே சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர்கள் எசனை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஜெனரேட்டர் ஏற்றிச் சென்ற லாரி ஆனந்தின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆனந்த் மற்றும் குணா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபர்களின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான கண்ணுசாமி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.