Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வீட்டிற்கு சென்ற தம்பதியினர்…. வழியிலேயே நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

கண்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தம்பதியினர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பையூர்மேடு மாரியம்மன் கோவில் தெருவில் ராதாகிருஷ்ணன்- அம்சவள்ளி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். நேற்று தம்பதியினர் பக்கரிபாளையம் பகுதியில் இருக்கும் செங்கல் சூளையில் வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் விழுப்புரம்-செஞ்சி புறவழிச்சாலையில் முத்தாம்பாளையம் ஏரி அருகே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்ற கண்டெய்னர் லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ராதாகிருஷ்ணன், அம்சவள்ளி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடலையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |