கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே பூசாரிப்பட்டி பகுதியில் தெச்சு தொழிலாளியான முருகேசன்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரா(20) என்ற மகள் இருந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.ஏ இறுதியாண்டு படித்து வந்துள்ளார். அங்குள்ள விடுதியில் தங்கியிருந்து படித்த பவித்ராவுக்கு கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் முருகேசன் தனது மகளை நேற்று முன்தினம் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
நேற்று வீட்டில் தனியாக இருந்த பவித்ரா மர வேலைக்கு பயன்படுத்தும் தின்னரை உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனை அடுத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த பெற்றோர் தங்களது மகள் கருகிய நிலையில் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.