Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு அழைத்து சென்ற முதியவர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈத்தாமொழி பகுதியில் கணபதி(76) என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் அதே பகுதியில் வசிக்கும் 8 வயதுடைய சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் முதியவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இதனால் சிறுமி அங்கிருந்து வீட்டிற்கு தப்பி ஓடி வந்து தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி அழுதுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் கணபதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |