Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு…. அச்சத்தில் உறைந்த குடும்பம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!!

வீட்டிற்குள் புகுந்த பாம்பை  நீண்ட நேரம் போராடி பிடித்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உங்கரானஅள்ளி பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நேற்று அருகில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜகோபாலின் குடும்பத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள்  நீண்ட நேரம் போராடி அந்த பாம்பை பிடித்தனர்.

அதன் பின்னர் அந்த பாம்பை கொண்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதேபோல்  அதே பகுதியில் அமைந்துள்ள மல்லிகை கடைக்குள் பாம்பு புகுந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |