Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்த 6 அடி பாம்பு…. அலறி அடித்து கொண்டு ஓடிய குடும்பம்….. லாபகரமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்….!!!!

வீட்டிற்குள் நுழைந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி பிடித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு பகுதியில் ஞானசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நேற்று திடீரென அருகில் இருக்கும் காட்டுப்பகுதியில் இருந்து 6அடி  நீளம் உடைய சாரை பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த  அவரது குடும்பத்தினர் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்துள்ளனர்.

இதனை  பார்த்த  அப்பகுதி  மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி வீட்டிற்குள் நுழைந்த    பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை பொன்னூர் காப்பு காட்டில் கொண்டு விட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுகியுள்ளது.

Categories

Tech |