சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி பகுதியில் கிறிஸ்டோபர்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேன் ஓட்டுனராக இருக்கிறார். இந்நிலையில் கிறிஸ்டோபர் அதே பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கிறிஸ்டோபரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஆயிரம் ரூபாய் அபராதமும், 7 ஆண்டுகள் ஜெயிலில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 75 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்பட்ட நிலையில், மேலும் 25 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டார்.