சோழபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 17 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளுவர் மாவட்டம் சோழபுரம் அடுத்து பெருங்காவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரி என்பவர் தனது வீட்டை பூட்டி விட்டு அருகிலுள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். மீண்டும் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு அறையில் இருந்த 17 சவரன் நகை 32,000 ருபாய் கொள்ளையடித்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் சோழபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.