Categories
மாநில செய்திகள்

வீடு புகுந்து சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி…. வாலிபர் கைது…!!!!!!

வீடு புகுந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருக்கனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுமி தனது பாட்டியுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வாலிபர் ஒருவர் நள்ளிரவில் வீடு புகுந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி சத்தம் போட்டுள்ளார்.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். அதன் பின் அந்த வாலிபரை மடக்கி பிடித்து திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். விசாரணையில் அவர், திருக்கனூரை சேர்ந்த தாஸ் (வயது 22) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Categories

Tech |