பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் அருகே பெரியவிளை பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஞான பாக்கியபாய் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் வெளிநாட்டில் இருக்கும் கணவருடன் ஞானபாக்யாபாய் அடிக்கடி வீடியோ காலில் பேசி வந்துள்ளார். இதனையடுத்து நேற்றும் வழக்கம்போல் தன்னுடைய கணவரிடம் வீடியோ கால் மூலமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் கோபத்தில் ஞானபாக்கியா பாய் செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
இதனால் பதற்றமடைந்த செந்தில் உடனடியாக உறவினர்களுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தன்னுடைய மனைவியை சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அதன்படி உறவினர்களும் செந்தில் வீட்டிற்கு சென்று பார்த்த போது ஞானபாக்கியாபாய் வீட்டில் பிணமாக தொங்கியுள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஞான பாக்கியபாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.