Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விஷ வண்டு தாக்குதல்…. படுகாயமடைந்த 3 பேர்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

தீயணைப்பு துறையினர் விஷ வண்டுகளை தீ வைத்து அழித்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி கிராமத்தில் இருக்கும் மரங்களில் விஷ வண்டுகள் கூடு கட்டியுள்ளது. இந்த வண்டுகள் கடித்ததால் அப்பகுதியில் வசிக்கும் 3 பேர் காயமடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீ வைத்து விஷ வண்டுகளை அழித்தனர்.

Categories

Tech |