சக்ரா படம் தொடர்பாக லைக்கா நிறுவனம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல் 5 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விஷால் நடிப்பில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி வெளியான படம் சக்ரா. இந்த படம் வெளியிட கூடாது என்று லைக்கா நிறுவனமும், டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் படம் வெளியீட்டுக்கு தடை விதிக்கவில்லை. இருப்பினும் இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது அதிரடியான தீர்ப்பு வெளியாகியுள்ளது.
படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், சக்ரா படம் தொடர்பான இரண்டு வார வசூல் விவரங்கள் மற்றும் இணையத்தில் வெளியிடும் ஒப்பந்தம் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. பின்னர் இந்த வழக்கு தொடர்பான எந்த அறிக்கையும் தாக்கல் செய்யாத காரணத்தினால் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது. அது மட்டுமல்லாமல் பொய்யான வழக்கை முன்வைத்து விஷாலை துன்பத்திற்காக லைக்கா நிறுவனத்திற்கு 5 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும் எனவும் நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார் இதனை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.