வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்த ஒற்றை யானையை வனத்துறையினர் வெடி வைத்து விரட்டியடித்தனர்.
குடியாத்தம் அருகே தமிழக – ஆந்திர எல்லையோரம் உள்ள வனப்பகுதியில் இருந்து வரும் யானைகள் கூட்டம் தொடர்ந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இதே போன்று வனப் பகுதியில் இருந்து வந்த ஒற்றை காட்டு யானை கதிர்குலம் விவசாய நிலங்களைப் சேதப்படுத்தியது.
தகவல் அறிந்து வந்த குடியாத்தம் வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் யானையை பட்டாசு வெடித்து விரட்டினர். விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள் முற்றிலும் வராமல் தடுக்க வனத்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.