கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளுக்கு விவசாய கடன் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் விவசாய கடனில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது.
இந்நிலையில் திருட்டு வழக்குகளில் சிக்கிய விவசாயிகளுக்கு விவசாயக் கடன் வழங்க கூடாது. மேலும் அவர்களுக்கு மானிய விலையில் உரம், விதை பெற முடியாதபடி கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.