விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக சமூக ஆர்வலர் திரு.அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே வெளியிட்டுள்ள அறிக்கையில் விவசாயிகளின் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக கடந்த நான்கு ஆண்டுகளாக தான் போராடி வருவதாகவும் ஆனால் மத்திய அரசு விவசாயிகளின் நலன் சார்ந்த முடிவுகளை எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் பிரச்சனைகள் தொடர்பாக நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ள அவர் தனது ஆதரவாளர்கள் அவரவர் இடங்களில் போராட்டத்தில் ஈடுபடும்படி அறிவித்துள்ளார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது திரு.அண்ணா ஹசாரே மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுத்தது நினைவுக்குரத்தக்கது.