Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளை உள்ளே விடக்கூடாது..! அதிரடியில் இறங்கிய போலீஸ்… மத்திய அரசு நடவடிக்கை …!!

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க இரும்பு கம்பிகள் கொண்டு தடுப்பு சுவர் அமைத்து உள்ள போலீசார் சாலைகளில் கூரிய ஆணிகளை பதித்துள்ளனர்.

குடியரசு தினத்தன்று தலைநகரில் நடைபெற்ற டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. இதனைக் காரணம் காட்டி விவசாயிகளின் போராட்டத்தை கலைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக உத்தரபிரதேசம், டெல்லி, காசிப்பூர் எல்லையில் விவசாயிகள் போராட்டத்தை கலைக்க  போலீசார் தீவிரம் காட்டி வருகின்றது.

இருந்தபோதிலும்  போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் டெல்லியை நோக்கி மீண்டும் படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் நுழைவதை தடுக்க காசிப்பூர், சிங், டிக்கிரி எல்லைக்குள் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளின் வாகனகங்கள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க இரும்பு கம்பிகள் கொண்டு தடுப்பு சுவர் அமைத்து உள்ள  போலீசார் சாலைகளில் கூறிய ஆணிகளை பதித்துள்ளனர்.

Categories

Tech |