Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! ரூ.2000 பணம் வேண்டுமா…? உடனே இதை செஞ்சிடுங்க்…. இன்றே(30.11.22) கடைசி நாள்…!!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறது.

இதில் தற்போது வரை 12 தவணை பணம் வழங்கப்பட்ட நிலையில் 13வது தவணையாக டிசம்பர் முதல் மார்ச் முடியவிருக்கும் காலத்திற்கான தவணையை பெறுவதற்கு ஆதார் எண்ணை கிசான் இணையதளத்தில் இணைத்து 30ஆம் தேதிக்குள் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கூறியது. அப்படி இணைப்பவர்களுக்கு மட்டுமே பணம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே இன்றே கடைசி தேதி என்பதால் உடனே சென்று இ சேவை மையம் அல்லது கைப்பேசி மூலமாக ஆதார் எண் இணைத்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |