Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே…! முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு…. மின்வாரியம் வெளியிட்ட புதிய உத்தரவு….!!!!

தமிழக மின்வாரியம் சார்பாக அனைத்து பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. அதில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆழ்துளை குழாய் மற்றும் திறந்தவெளி கிணறுகளுக்கு வருடத்திற்கு 2000 மின் இணைப்புகள் வழங்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாய மின் இணைப்புகளில் 2 மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் கணக்கிட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட துறை உதவி இயக்குனரிடம் மின் நுகர்வு தொகை வசூல் செய்யப்பட வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |