திருப்பூர் மாவட்ட விவசாயிகள் சம்பா நெற்பயிருக்கு பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் ஏக்கருக்கு பிரீமியம் தொகை 559.50 காப்பீடு கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரதமரின் இந்த திட்டத்தில் பயிர் கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும். இதில் கடன் பெறாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது இ சேவை மையம் மூலமாக உரிய பிரிமியம் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.
விவசாயிகள் அனைவரும் வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பதிவு செய்யும்போது முன்மொழிவு படிவம், பதிவு படிவம், கிராம நிர்வாக அதிகாரி வழங்கும் நெல் சாகுபடி அடங்கல்,வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்ற இணைத்து பதிவு செய்து ரசீதை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.