Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி 24 மணி நேரத்தில் மின் இணைப்பு…. அமைச்சர் சொன்ன சூப்பர் அறிவிப்பு….!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள கப்ளாங்கரை பகுதியில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக ஆழியார் ஆற்றினை நீர் ஆதாரமாக கொண்டு ரூபாய் 69 லட்சம் செலவில் 212 கிராமங்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வழங்கும் விதமாக செயல்படுத்தப்பட்ட குடிநீர் திட்டத்தை முதல்வர் முக.ஸ்டாலின் நேற்று காணொளி மூலமாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். இதனை நெகமம் அடுத்துள்ள கப்லங்கரை கிராமத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் போன்றோர் நேரில் பார்வையிட்டு திட்டத்தின் பயன்பாடு தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

இதையடுத்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளார்களை சந்தித்து பேசியபோது, புதிய மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு 24 மணி நேரத்தில் மின் இணைப்பானது வழங்கப்படும். இதனிடையில் முதலமைச்சர் விவசாயிகளுக்கு அறிவித்த 1 லட்சம் இலவசம் மின்சாரம் வழங்கும் பணிகள் நடந்து வருகிறது. இதுவரையிலும் 23 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாட்டால் மின் தடை ஏற்பட்டாலும் தமிழகத்தில் ஏற்படவில்லை.

தமிழகத்தில் தடை இல்லா மின்சாரம் வழங்கும் விதமாக முதல்வர் அறிவுறுத்தலின்படி மின் விநியோக கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதாவது 216 புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பதற்காக இடங்கள் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதில் 73 துணை மின்நிலையங்களுக்கு மட்டும் இடம் தேர்வு செய்ய வேண்டிய பணிகள் இருக்கிறது. 32 ஆயிரம் பேருக்கு இலவச மின்சாரம் வழங்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும் மீதம் உள்ள 45 ஆயிரம் விவசாயிகளுக்கு ஆவணங்கள் சரிபார்ப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனைதொடர்ந்து மார்ச் மாதித்தில் விவசாயிகளுக்கான மின்இணைப்பு வழங்கும் திட்டமானது நிறைவு செய்யப்படும்” என்று அவர் பேசியுள்ளார்.

Categories

Tech |