Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஒரு முறை  வென்றுள்ளார். திமுக 8 முறையும், அதிமுக 5 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளனர். தற்போதய எம்எல்ஏவாக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் உள்ளார். விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2,60,970 வாக்காளர்கள் உள்ளனர். விவசாயத்தை பிரதானமாக நம்பியுள்ள இந்த தொகுதியில் சர்க்கரை ஆலைகளிடமிருந்து நிலுவைத் தொகையை பெற்றுத் தர எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது கரும்பு விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

தொழிற்சாலைகள் உருவாக்க படாததால் வேலைதேடி வெளி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதாக இளைஞர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.  தங்கநகை தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் கூறும் நகை தயாரிப்பாளர்கள் மூலதன கடனாக தங்கம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

காய்கறி வணிக வளாகம் கட்டி தர வேண்டும் என்பதும், நடைபாதை வணிகர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்பதும் வணிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. மீன் மார்க்கெட் அமைக்கும் பணி விரைந்து முடிக்க வேண்டும் என்றும் வணிகர்கள் வலியுறுத்துகின்றனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சுற்றுவட்டார சாலைகள் அமைக்க வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Categories

Tech |