2022 ஆம் ஆண்டிற்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டத்தை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று தொடங்கி வைத்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அண்டை நாடுகளில் இன்னமும் போலியோ நோய்த் தாக்கம் உள்ளது. எனவே நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும். போலியோவுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை பொது சுகாதாரத் திட்டத்தின் வெற்றி ஆகும். 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்குவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
இதில் எந்த ஒரு குழந்தையும் விடாமல் இருப்பதற்காக வீடு வீடாக சென்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு சொட்டு மருந்து வழங்க முன்வர வேண்டும் என நான் பெற்றோர்களுக்கு கோரிக்கை விடுக்கிறேன் எனவும் கூறியுள்ளார். தமிழகத்தில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் நாளை (பிப்ரவரி 27) போலியோ சொட்டு மருந்து போடப்பட உள்ளது.
இதற்காக போலியோ சொட்டு மருந்து முகாம் 43,051 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை காலை 7 மணி முதல் மதியம் 5 மணி வரை முகாம் நடைபெற உள்ளது. இதில் காய்ச்சல், இருமல் மற்றும் கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் போன்றவர்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து மிகவும் அவசியம்என தமிழக அரசு தெரிவித்துள்ளது.