Categories
உலக செய்திகள்

விளையாட்டுடன் அரசியலில் புகுத்தும் இந்தியா…. பாகிஸ்தான் கண்டனம்….!!!!!!!

44வது செஸ் ஒலிம்பியாட்  தொடர் சென்னை அடுத்த மாமல்லபுரம் பூந்தேரி கிராமத்தில் நட்சத்திர ஓட்டல் அருகில் இன்று முதல் வரும் 10 ம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. செஸ் ஒலிம்பியாட்  தொடர்பான தொடக்க விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றுள்ளது. தொடக்க விழாவில் பிரதமர் மோடி முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் தொடரை துவங்கி வைத்துள்ளனர். முன்னதாக ஒலிம்பியாட்  ஜோதி இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று இறுதியாக மாமல்லபுரத்திற்கு வந்தடைந்தது. அந்த ஜோதியை பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதற்கு இடையே செஸ் ஒலிம்பியாட்  தொடரில்  பங்கேற்பதற்காக பாகிஸ்தான் உட்பட 188 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மாமல்லபுரம் வந்தடைந்துள்ளனர். ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர், வீராங்கனைகளும் சென்னை வந்தடைந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் அனைவரும் நேற்று நடைபெற்ற தொடக்க விழாவில் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் செஸ் ஒலிம்பியாட்  தொடரில் இருந்து விலகுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவே வீரர், வீராங்கனைகள் அனைவரும் சென்னையில் இருந்து விமானம் மூலம் பாகிஸ்தான் புறப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஒலிம்பியாட்டில் பங்கே இருப்பது  பற்றி பாகிஸ்தான் வெளியுறவுத்துறை விளக்கம் அளித்து இருக்கின்றது.

செஸ் ஒலிம்பியாட்  ஜோதி ஜம்மு காஷ்மீர் வழியாக கொண்டு செல்லப்பட்டதாலே பாகிஸ்தான் இந்த தொடரில் விலகியதாக கூறியுள்ளது. ஒலிம்பியாட்  ஜோதி கடந்த மாதம் 21ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச தலைநகர் ஸ்ரீநகருக்கு சென்றுள்ளது. அங்கிருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் தொடரை புறக்கணித்தது  தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் விளையாட்டுடன் அரசியலை புகுத்தும் இந்தியாவின் முயற்சிக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்து வருகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 44வது செஸ் ஒலிம்பிய தொடரில் பங்கேற்கப் போவதில்லை என பாகிஸ்தான் முடிவு செய்து இருக்கின்றது. இந்த விவகாரத்தை சர்வதேச செஸ்  கூட்டமைப்பில் எழுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டிருக்கிறது. ஆனால் கடைசி நேரத்தில் தொடரில் இருந்து பாகிஸ்தான் விலகிய நிலையில் 187 நாடுகளுடன் செஸ் ஒலிம்பியாட்  தொடர்பான துவக்க விழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

Categories

Tech |