தண்ணீரில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மிட்டபள்ளி கிராமத்தில் சத்யராஜ்-அகிலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 வயதுடைய சுதர்சன் என்ற மகன் இருந்துள்ளான். இவர்களது வீட்டிற்கு அருகே திறந்த வெளியில் தண்ணீர் தொட்டி அமைந்துள்ளது. இந்நிலையில் தொட்டிக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த சுதர்சன் எதிர்பாராதவிதமாக தவறி தொட்டிக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கினான்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக குழந்தையை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் சுதர்சன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் குழந்தையின் உடல் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.