மின்சாரம் தாக்கி 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள மீனங்குடி கிராமத்தில் முருகவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 7 வயதில் முகேஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முருகவேல் தனது உறவினரான மலைச்சாமி வீட்டிற்கு முகேஷை அழைத்து சென்றுள்ளார். அங்கு மலைச்சாமி வீடு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்த தொட்டியில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு விளையடிகொண்டிருந்த சிறுவன் எதிர்பார்த்த விதமாக மோட்டாரில் இருந்த மின்சார கம்பியை தொட்டுள்ளார். இதில் சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற கடலாடி காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு உடற்கூராவிர்க்காக கடலாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.