கட்டிடம் இடிந்து விழுந்து சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கள்ளையங்குப்பம் கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தரணிதரன்(13) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் குறிஞ்சிப்பாடியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் தரணிதரன் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் கிராம நிர்வாக அலுவலகம் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து சிறுவன் மீது விழுந்தது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த தரணிதரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டான். இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.